யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் கிராமங்களான கீழ்கரவை, கட்டைவேலி தென்துன்னை மத்தியிலே தல்லையப்புலம் புண்ணிய பூமிதன்னில் அருள்பாலித்து ஆட்சிபுரியும் எல்லாம் வல்ல வீரபத்திரர் பத்திரகாளி அம்மன் சமேதராக இருக்கும் ஆலய வரலாற்றுச் சிறப்பு மகிமை அருள் சித்தி எல்லாம் ஒருங்கே அமைந்திருப்பதனால் அன்றும் இன்றும் அனைத்து மக்களினது வழிபாட்டுக்குரிய தலமாக விளங்குகின்றது. வீரபத்திரர் பத்திரகாளி அம்மன் சமேதராக இருக்கின்றபோதும் பத்திரகாளி அம்மனின் பெயர் நாமம் எல்லா மக்களாலும் வணங்கி வழிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இருநூறு வருடங்களுக்கு முன் கொன்றை மரநிழலில் கொட்டில் அமைத்து ஞானியார் ஒருவர் பூசை செய்து வந்ததாக அறிகின்றோம். எதுவும் எம் முன்னோரால் ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனாலும் அந்தக்காலம் தொடக்கம் இன்றுவரை தல்லையப்புலம் குமரக்குள மக்கள் தரிசித்து ஆலய வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.






எழுந்து நிற்கும் எமது குலதெய்வத்தாய் பத்திரகாளி அம்பாள் புகழ்பாடவும் , வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு நகர்த்திச் செல்லவும் , எமது ஆவணங்களை பாதுகாக்கவும், இந்த இணையமானது ஆலய நிர்வாக, மக்கள் அனுசரணையுடன் உருவாக்கம் பெற்றது.

